Photos: PrakasH MunnA அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் அங்குமிங்கும்... குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரள்கள், திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனுள், பிண்டுப் பிரிந்ததேநம் பூமி! அண்டம் விட்டு அண்டம் ஆயும், அறிவியல்... ஒர்நாள் – கண்டம் விட்டு கண்டம் பாயும்? அகிலம் கருகி... சாம்பலாகும்! மானுடம் பிழைக்க – பயிர் வயல்கள், செடி கொடிகள்... பூத்துப் புன்னகைக்கின்றன! ஆனால் – பூச்சிக்கொல்லி மருந்துகளால், தானியங்கள், காய்கள், கனிகள்; நஞ்சுகளாகின்றன! அதனால்... அறிவியல் ஒரு அரியும் வெங்காயம்! மருந்தும் ஆகின்றது! எரிச்சலும் தருகின்றது! அறிவியல்... சூரிய மண்டலம்கடந்து... சுழலவும் செய்கின்றது! பால்வெளி வீதிக்குள்நுழைந்து... பயணமும் தொடர்கின்றது! அதனால்... உலகம் சுருங்குகின்றது! பிற கிரகங்களின் இரகசியங்களைத் தெரியவும் உதவுகின்றது! ஆனால்... அழிவைச் செய்திடும் கலகக் காரர்களுக்கு– வேட்டைநாயும் ஆகின்றது! அறிவியல் இரவுகளில் … ஒளிக் கற்றைகளாகி அகிலத்துக்குள் இருட்டைக் களைகின்றது! உலகோர் தேவைகளை... ஆலைகளா
Comments
Post a Comment